பல்லவி:

கருணையே வடிவமாய் செங்கமலவல்லி

கமலத்தில் வீற்றருளும் மாலவனின் அல்லி


சரணம்:

பொறுமையே வடிவான ஒளிமிகு திருமுகம்

பொல்லா தவரை எரித்திடும் அருள்முகம்
   
                                     
                             ( கருணையே.......)




மாங்கல்யம் அலங்கரிக்கும் தாயவளின் கண்டம்

மாலவனின் மாலையேற்ற மாண்புமிகு கண்டம்

                             ( கருணையே.......)




கோபாலன் குடிகொண்ட இரத்தின மார்பு

கோடி ஒளிக்கீற்றல்மிகு பதக்கமணி மார்பு
 
                            ( கருணையே.......)




ஒட்டியாணத் தோடு இயைந்ததவள் மெல்லிடை

ஒய்யார நடையனின் இராணியது செவ்விடை
 
                              ( கருணையே.......)






வர்ணனைக் கெட்டாத மலரன்ன திருக்கரம்

வற்றாத செல்வங்கள் வழங்கிடும் பொற்கரம்

                              ( கருணையே.......)




உலகாளும் அரசியின் உயர்ந்த இத்திருவடி

உயிர் பரமனை பற்ற பற்றிவள் திருவடி
     
                               ( கருணையே.......)




செங்கமலத் தாயவள் கழலினை பற்றினால்

செவ்விதழன் கழல்புக பரிவுகொண் டருளுவாள்!

                               ( கருணையே.......)



                                           - ஹரிசரண்

Comments

Popular posts from this blog