பல்லவி: ஆனந்தம் எது ஆனந்தம் ஆலிலை அழகனின் சரணமே - இப்புவியில் சரணம்: செல்வத்தில் புரள்வதா ஆனந்தம் செல்வத்தின் அதிபதி சரணமே- இவ்வுலகில் (ஆனந்தம்.......) மாதிடம் சிற்றின்பமா ஆனந்தம் மாய மாதவன் சரணமே- இப்பிறவியில் (ஆனந்தம்.......) நிலங்களின் உரிமையா ஆனந்தம் நிலமகள் மன்னவன் சரணமே - இவ்வாழ்வில் (ஆனந்தம்.......) சூதில் அலைவதா ஆனந்தம் சூத்திர தாரியின் சரணமே- இக்கலியில் (ஆனந்தம்.......) கோப தாபமா ஆனந்தம் கோபாலனின் துகில்மணச் சரணமே - இம்மனதில் ...