யாதுமாகி நின்ற யாதவ குலத்தோனே!
மாதுமாகி உன்மேல் மையல் கொள்வேனே!

ஆணாக எனை நீ படைத்திருந்தாலு முனை
தானாக வந்தடைய பெண்ணாக மாறுவனே!


கண்ட பின்பு கண்கள்தம் இருப்பிடமே மறக்குதடா -- உனை
                       (கண்ட பின்பு)

கள்ளச் சிரிப்பு உள்ளத்தை இல்லாமல் ஆக்குதடா -உன்
                        (கள்ளச் சிரிப்பு)


செய்த செயல்கள் யாவுமே மறந்தே தொலையுதடா - முன்பு
                               (செய்த)

செவ்வாய் கனியினையே எண்ணிமனம் உருகுதடா - முகுந்தன்
                              (செவ்வாய்)


நிலை மறந்து சித்தம் பித்தாகி திரியுதடா - உன்னால்
                               (நிலை மறந்து)

நிறம் மறந்து விழியோ செங்கதிராய் சிவக்குதடா - உன்னால்
                              (நிறம் மறந்து)



அறிகுறிகள் யாவையுமே காதலை நிறுவுதடா-
இந்த
                                  (அறிகுறிகள்)

அணுவணுவாய் கோபால பிரியனை நொறுக்குதடா - இது
                                 (அணுவணுவாய்)
                                       - ஹரிசரண்


Comments

Popular posts from this blog