உனது ஆடலில் என் மனம் படும் பாடு அறிவாயா? மயிற்பீலி அசைந்தாடிட மனமென்னவோ ஆகுதே! மயக்கமும் வந்தெய்தி இன்பவுணர் கூடுதே! பதம் மறந்து வாய் குழற இதம் தனை மனம் ரசிக்குதே! நிதம் உனது எண்ணம் வந்து சிதம் தனை புகுத்த லாக்குதே! மனம் உருகி உன் நாமம் தினம் போற்றி பாட எண்ணுதே! இனம் புரியா காத லொன்று அனம் போல் சுற்றி பறக்குதே! இதை யாவையும் வினை யாற்றிடு்ம் விதை நீயன உள முணருதே ! பதை யோடுன் திருப் பாதத்தின் கதை கூறிட நா ஊறுதே! கோ பால பிரிய னுள்ளம் மா பாலம் கடக்க அம் மூ பாலன் மாம னான பூ பாலன் கழலைப் பேணுதே! - ஹரிசரண்
Popular posts from this blog
குழந்தை யாகவே காண்கிறேன் குன்று உயர்த்தி நின்றாலும் - உனை குழந்தை யாகவே காண்கிறேன் அரக்கரை வதைத்து தர்மம் காத்திடினும் அரவு மீதடியை பதித்து ஆடிடினும் (குழந்தை.....) உலகத்தை படைத் தாட்சி புரிந்திடினும் உன்னத உணர்வாலே உலகோரை மயக்கிடினும் (குழந்தை.....) மன்னையில் மன்னன் போல் இருந்திடினும் மங்கையை திரு மார்பில் சுமந்திடினும் (குழந்தை.....) இருவரோடு கூடி விளை யாடிடினும் இம்மையும் மறுமையும் நீ ஆகிடினும் (குழந்தை.....) இராஐ மகுடம் நீ தரித்திடினும் இணையற்ற கீர்த்தி நீ பெற்றிடினும் (குழந்தை.....) வைகுந்த நாதனாய் நீ அருளிடினும் வையம் முழுதும் நீ அளந்திடினும் ...
அடியேனுடைய இருபத்து ஐந்தாம் பாடல் கோபால நாமம் வாழி! நாரணா வாழ்க! நால்வேத பொருளே வாழ்க! காரணா வாழ்க! கார்மேனிச் செம்மலே வாழ்க! இன்னுயிரில் கலந்த எம் மன்னவா வாழ்க! இம்மை எனை ஆட்செய்யும் இராகவா வாழ்க! தென் துவாரகை யாளுங் கோவே வாழ்க! தெளிந்த நீரின் அருங் குணமே வாழ்க! அரவு மீதயர்ந்த மலர் மார்பா வாழ்க! அகத்தினி லமர்ந்த ஒளிச் சுடரே வாழ்க! பல்லாண்டு கேட்டருளும் திருச் செவிகள் வெல்க! பகையோரைப் பந்தாடும் பொற் கோலும் வெல்க! ஈருலக மளந்த நின் திருவடிகள் வெல்க! ஈடற்ற மரகதத் திரு மேனி வெல்க! வெண்ணெய் களவாடிய நின் பொற்கரங்கள் வெல்க! வெம்மை தீர்த்தருளும் நனி வதனம் வெல்க! வலமாய் வள மருளும் திருமகளும் வெல்க! வஞ்ச மழித்திடும் நின் திருநாமம் வெல்க! புறத்தே புலப்படா இறைவன் அடி போற்றி! புலன் அடக்கின் புரியும் மாயனடி போற்றி! தர்மத்திலே உறையும் கண்ணனடி போற்றி! தன்னிகரற்ற நம் தேவன் அடி போற்றி! பத்தால் பார்காத்த பரமன் அடி போற்றி! பரகாலனுக் கருளிய மன்னன் அடி போற்றி! கோபிலாதி முனிவர் தொழும் குழந்தையடி போற்றி! கோபால பிரய ன...



Comments
Post a Comment