கரிய நிறத்தானவன் - எழில்மிகு
அரிய முகத்தானவன்
கனித்த மனத்தானவன் - பற்றிலா
தனித்த உருவானவன்
கண்ணில் தெரியாதவன் - மனத்தின்
பண்ணில் ஒளியானவன்
வினைகள் அறுப்பானவன் - உறுபெரும்
சினைகள் தானானவன்
கலைகள் எல்லாமவன் - இடரறு
பலைகள் வடிவானவன்
இணைகள் இல்லாதவன் - ஐம்பெருந்
திணைகள் ஆனானவன்.
சனத்தில் அன்பானவன் - உயிர்களின்
இனத்தில் உயர்வானவன்.
வேதத்தில் உறைவானவன் - ஒலிக்கின்ற
நாதத்தில் கரைவானவன்.
பக்திக்கு பித்தானவன் - எட்டாத
முக்திக்கு வித்தானவன்.
கோபாலப் ப்ரியநாதனாம் - திருமன்னை
கோபாலன் கோபாலனே!
- ஹரிசரண்
பொருள்:
பலை - இடர்படும் காலங்களில் ஜபிக்கக் கூடிய மந்திரம்
அரிய முகத்தானவன்
கனித்த மனத்தானவன் - பற்றிலா
தனித்த உருவானவன்
கண்ணில் தெரியாதவன் - மனத்தின்
பண்ணில் ஒளியானவன்
வினைகள் அறுப்பானவன் - உறுபெரும்
சினைகள் தானானவன்
கலைகள் எல்லாமவன் - இடரறு
பலைகள் வடிவானவன்
இணைகள் இல்லாதவன் - ஐம்பெருந்
திணைகள் ஆனானவன்.
சனத்தில் அன்பானவன் - உயிர்களின்
இனத்தில் உயர்வானவன்.
வேதத்தில் உறைவானவன் - ஒலிக்கின்ற
நாதத்தில் கரைவானவன்.
பக்திக்கு பித்தானவன் - எட்டாத
முக்திக்கு வித்தானவன்.
கோபாலப் ப்ரியநாதனாம் - திருமன்னை
கோபாலன் கோபாலனே!
- ஹரிசரண்
பொருள்:
பலை - இடர்படும் காலங்களில் ஜபிக்கக் கூடிய மந்திரம்
Comments
Post a Comment