அண்டுவாரில்லா ஆருயிர்காள்!!
அண்டுக செல்வப் பூஞ்சோலை - அது
வண்டு வராபதி எனுஞ்சோலை!!

இடக்கரம் நோக்குங்கோல் உயிரனங்காள்!!
இவன்வைகுந்தம் தன்னில் மானுடரை
இளைப்பாற அருளவே நீட்டினானோ?..
இடம்தர பதம்நோக்கிக் காட்டினானோ?..

குறையேதும் வேண்டாம் மானுடங்காள்!!
குட்டன் உரையளிப்பான் உள்ளத்துணர்வளிப்பான்..
கூறுங்கள் மனக்குறை அவனிடமே..
கூடுங்கள் அவனோடு பேரின்பமே..

தேடுக அவனது உள்ளுணர்வை..
நாடுக கள்வனின் கழலிருப்பை..
ஒதுக மாயனின் மெய்நிலையை..
பாடுக குழந்தையின் அருங்குறும்பை..

கோபாலன் குடும்பத்தில் ஒருவனாவான்..
கோளாறு எதையினும் அவன்முறிப்பான்..
கோலமும் வாய்நகையும் துயர்கலையும் ....
கோபால பிரியனின் மனம்நிறையும்!!
                      - ஹரிசரண்..

Comments

Popular posts from this blog